கொரோனாவின் தாண்டவத்தை அடக்கும் இந்து ஆலயங்கள்!

0
7851

சீனாவில் ஆரம்பித்து அதிரடியாகத் தொடர்ந்து ஐரோப்பாவில் குறிப்பாக இத்தாலியில் கோரத் தாண்டவமாடுகிறது கொரோனா.

இத்தாலி முழுமையாக முடங்கிக்கிடக்கின்றது, பிரிட்டனிலும் பலியெடுக்கத் தொடங்கிவிட்டது, மூன்றாம் இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென்கொரியாவும் இருக்க, பிரான்சை முந்திக்கொண்டு ஸ்பெயின் ஐந்தாம் இடத்திலும் ஜேர்மன் ஆறாம் இடத்திலும் நிற்கின்றன. பிரான்சு கொரோனாவின் பிடியை எதிர்கொண்டு மேலும் தயார்நிலையில் உள்ளது. இவ்வாறு சுவிஸ்,நெதர்லாந்து, பெல்ஜியம் என ஏனைய நாடுகளின் பட்டியல் தொடர்கிறது.

இதேவேளை, கிறிஸ்தவ ஆலயங்கள் பல திருப்பலிகளை நிறுத்தியுள்ளன.

கிறிஸ்தவ வழிபாடு, யூத வழிபாடு அதாவது கூட்டு வழிபாடு,மொத்தமாகக் கூடித்தான் பிரார்த்திப்பார்கள். இங்கே கொரானோ பரவ வாய்ப்பு என முடிவெடுத்தாயிற்று.

இந்நிலையில், இந்து ஆலயங்கள் பற்றி உலகமே வியந்து நிற்கின்றது.

அதாவது, இந்துக்களின் ஆலய பிரவேசத்தையும் வழிபாட்டு முறைகளையும் கவனியுங்கள், ஆச்சரியமான விஷயங்கள் புலப்படும்.

கூட்டு வழிபாடு பெரும்பாலும் இல்லை மாறாக யாரும் எப்பொழுதும் வரலாம்.

இந்து ஆலயங்கள் வழிபாட்டுக்கு சம்பிரதாயப்படி கால், கையினை கழுவிவிட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும், இதனால் நோய்பரவும் முதல் வழி தடுக்கப்படுகின்றது.

ஆலயத்தில் தீபத்தில் கையினை வைக்கும் பொழுதும் அக்கையினை கண்ணில் வைக்கும் பொழுதும் கிருமிகள் இருந்தால் அழிந்துவிடும், கற்பூரம் ஏற்றி கண்ணில் ஒத்துவதும் இதே தத்துவமே.

ஆம் கையினால் முகத்தை தொடாதீர்கள், கண்ணை மூக்கை தொடாதீர்கள் அடிக்கடி கழுவுங்கள் என உலகம் இன்று ஒப்பாரி வைக்கும் வேளையில் தீப சுடரில் கைகளை காட்டி சூடேற்று அதை முகத்துக்கும் கொடு நோய் பரவாது என என்றோ சொன்ன மதம் இந்துமதம்.

கர்ப்பக்கிரகத்தின் முன் வழிபாடு முடிந்ததும், கொடுக்கும் விபூதியினை நெற்றியில் பூசினால் அது கிருமி நாசினி , பசு சாண சாம்பல் இருக்குமிடம் கிருமி அண்டாது.

சாம்பிராணி புகையில் காற்றில் பரவும் கிருமி செத்துவிடுகின்றது, ஆலயமெங்கும் புகை பரப்பும் விஷயம் அதுதான்.

ஆலயமெங்கும் தீபம் ஏற்றப்படும் தத்துவம் இதுவே, அதுவும் நெய்யிலும் இன்னும் சில எண்ணெயிலும் எரியும் நெருப்பு கொடுக்கும் சக்தி விஷேஷமானது

(இன்று நெய், எண்ணெய் எல்லாம் மாறிவிட்டது என்பது வேறுவிஷயம், இது சரியான முறை அல்ல.)

அங்கு தரப்படும் சில பொருட்கள் கலந்த தீர்த்தம் மருத்துவ குணம் வாய்ந்தது, சர்வ கிருமி நாசினி, குடித்தால் தொற்று நோய் எளிதில் அண்டாது, அதை கைகளில் தேய்த்து கொண்டால் நோய் தடுப்பு நிச்சயம்

பிரசாதம் எனத் தரும் தேங்காய் முதல் மிளகு கலந்த பொங்கல் வரை எல்லாமும் மருந்தே

அது வைஷ்ணவ ஆலயமாக இருந்தால் துளசியும், அம்மன் கோவிலாக இருந்தால் கொடுக்கப்படும் வேப்பிலை விட சிறந்த நோய்த் தடுப்பு மருந்து இல்லை.

ஆலய மணி ஒலிக்க ஒலிக்க வழிபாடு நடத்துவது ஏன்? ஆலயமணியின் சில அதிர்வுகள் நுண்ணிய அதிர்வுகளை ஏற்படுத்தும் என்கின்றார்கள், மெல்லிய எலக்ட்ரிக் ஷாக் சிகிச்சைக்குரிய அதிர்வினை அது கொடுக்கும், இரத்த ஓட்டம் சீர்படும்.

இசை ஒலிக்கப்படும் தத்துவமும் இதுவே.

கோவிலில் எல்லோரும் வரும் இடம் விக்ரகங்களை அடுத்து அர்ச்சகர் என்பதால் விக்ரகங்களையும் ஐயரையும் எப்பொழுதும் மகா சுத்தமாக இருக்கச் சொன்னார்கள்.

அர்ச்சகர் தள்ளி நிற்பதும் அதிகம் தொட்டு பேசக் கூடா காரணம் இதுதான்.

அசைவம் உடல் வெப்பத்தை கூட்டும், ஆலயங்களில் கூடுதல் வெப்பம் நிலவும் என்பதாலும் அசைவ உணவினை உண்டவர்க்கு ஆலயத்தில் அனுமதி இல்லை என்றார்கள் .

(அதாவது உடலில் சிந்தியிருக்கலாம், கைகளில் கழுவப்படாமல் இருக்கலாம்)

அடிக்கடி காலையும் மாலையும் சில விக்ரகங்களை அபிஷேகம் என‌ கழுவுகின்றார்களே ஏன் , அக்காலத்தில் விக்ரகத்தை தொட்டு வணங்கும் வழக்கம் இருந்தது, பலர் தொட்டு செல்லும் நிலையில் நோய் பரவிவிட கூடாது என்றே அடிக்கடி நீரும் இன்னும் சில வஸ்துகளும் இட்டு கழுவி சாம்பிராணியிட்டு சுத்தமாக்கி வைத்தார்கள்

கற்பூரத் தீ கூட கிருமி அழிக்கும் தன்மை கொண்டதே, நறுமண பூக்களால் அலங்கரித்தார்கள், நல்ல மணம் கூட சில நல்ல விஷயங்களை கொண்டுவரும்

திதி கொடுத்தல் இன்னும் சில விஷயங்களில் அர்ச்சகர் கையில் தர்ப்பை கட்டுகின்றாரே ஏன்? தர்ப்பையில் நோய் கிருமி பரவாது என்பதை அன்றே அறிந்திருந்தது இந்து சமூகம்.

இந்துக்கள் எதெல்லாம் செய்ய சொன்னார்களோ அதெல்லாம் நோய் தடுப்பென்றும் எதெல்லாம் தீட்டு என்றார்களோ அதெல்லாம் நோய் பரப்பும் விஷயம் என்பதை மவுனமாக ஒப்புக்கொள்கின்றது உலகம்.

தொற்றுநோய் என புத்த விகாரை முதல் தேவாலயம் வரை மூடப்பட்ட நிலையில், இந்து ஆலயங்களின் அன்றாட நிகழ்வுகளில் ஒழிந்திருக்கும் நோய் தடுப்பு முறையினையும் அக்காலத்திலே மிக நுட்பமாக செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளையும் பற்றி வியந்துகொண்டிருக்கின்றது உலகம்

இங்கு எதுவும் மூட நம்பிக்கை அல்ல, அறிவுள்ள உலகம் நெருக்கடியான இந்நேரத்தில் இந்து ஆலயங்களின் பெருமையினை உணர்ந்து கொண்டிருக்கின்றது.

(குறிப்பு: இக்கட்டுரை எந்த மதத்தினரையும் புண்படுத்துவதற்காக அல்ல. தமிழர்களின் பண்டைய வழிபாட்டு முறைகள் நோயை நெருங்க விடாமல் இருப்பதையே காட்டி நிற்கின்றது.)

(நன்றி:இணையம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here