மட்டக்களப்பு வைத்தியசாலையில் கொரோனா பரிசோதனை வேண்டாம் என மக்கள் போராட்டம்!

0
303

வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மட்டக்களப்பு பல்கலைக்கழகம் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலைய தடுப்பு முகாமிற்கு கொண்டுவரப்படவுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று 10.03.2020 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றினைந்து இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து மாலை 3 மணிக்கு மட்டக்களப்பு ஆனைப்பந்தி பிள்ளையார் ஆலயத்தின் முன்பாக பொதுக்கள் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து மட்டக்களப்பு வைத்தியசாலையில் கேவி 19 கொரோனா பரிசோதனை வேண்டாம், அரசே சிகிச்சைக்காக மக்கள் நடமாட்டமற்ற பிரதேசத்தை தெரிவுசெய், மட்டு வைத்தியசாலை பொது மக்களுக்கானது , தனியான தனிமைப்படுத்தும் வைத்தியசாலையை ஏற்பாடு செய், நீங்கள் எங்களை வேறுபடுத்துகின்றீர்களா, கொரோனாவை எமக்கு திணிக்க வேண்டாம், என பல்வேறு வாசகங்கள் அடங்கிய சுலோகங்களை ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பியவாறு ஊர்வலமாக வைத்தியசாலை வீதி வழியாக வைத்தியசாலைக்கு முன்பு வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here