பிரித்தானியாவில் மேலும் 46 கொரோனா வைரஸ் தொற்று: 4 பேர் பலி!

0
349

பிரித்தானியாவில் மேலும் 46 புதிய கொரோனா வைரஸ் நோயாளிகள் இனங்காணப்பதையடுத்து பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 319 ஆக உயர்ந்துள்ளது.இரண்டு நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பதை வேல்ஸ் சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. அவர்கள் இருவரும் அண்மையில் இத்தாலிக்குச் சென்று திரும்பி வந்ததவர்கள் என்று கூறப்படுகின்றது.
அங்கு இதுவரையில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு இதுவரையில் 23 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.பிரித்தானியாவில் இதுவரை இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.
சீனா உட்பட 80 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 110,000 க்கும் அதிகமாகியுள்ளது.இதுவரையில் 3,800 க்கும் அதிகமானவர்கள் COVID-19 தொற்றுநோயினால் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நான்காவது நபர் உயிரிழந்துள்ளார் என்று சுகாதார அமைச்சர் மாற் ஹன்கொக் தெரிவித்துள்ளார்.உயிரிழந்தவர் ரோயல் வூல்வர்ஹம்ரன் (Royal Wolverhampton) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 70 வயதான ஆண் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

(ஈழம் ரஞ்சன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here