படுகொலை செய்யப்பட்ட பல்கலை மாணவன் சுலக்சனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி!

0
338

 கடந்த 2016ஆம் ஆண்டு சிறிலங்கா காவல்துறையினரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவனான சுலக்‌ஷனின் 28ஆவது பிறந்த தின நினைவஞ்சலி நிகழ்வு இன்று சுன்னாகம் நூல் நிலையத்துக்கு அருகில் சுலக்‌ஷனது நினைவாக அமைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.

படுகொலை செய்யப்பட்ட மாணவரது தந்தையாரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் மாணவனது பிறந்த தின ஞாபகார்த்தமாக சிறார்களுக்கு கட்டிகை வழங்கப்பட்டதுடன், கற்றல் உபகரணங்கலும் வழங்கி வைக்கப்பட்டன.

நிகழ்வில் விருந்தினர்களுடன் மாணவனது உறவினர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு சிறீலங்கா காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர். 5 சிறீலங்கா காவல்துறையினர் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். .

சம்பவம் தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான 5 சிறீலங்கா காவல்துறையினரும் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகநபர்களான 5 சிறீலங்கா காவல்துறையினரும் கடந்த 2018 செப்ரெம்பர் 14 அன்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். 5 சந்தேகநபர்கள் ஒவ்வொருவரும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணை, 2 இலட்சம் ரூபா பெறுமதியிலான 2 ஆள் பிணையில் செல் அனுமதிக்கப்படுகின்றனர்.
அவர்கள் அனைவரும் பிரதி ஞாயிற்றுக் கிழமைகளில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிட வேண்டும். சந்தேகநபர்களின் கடவுச் சீட்டு யாழ்ப்பாணம் நீதிவான் மன்றப் பதிவாளரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். அவர்கள் 5 பேரும் வெளிநாடு செல்வதற்கு தடைவிதிக்குமாறு குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்படுகிறது” என்று பிணை விண்ணப்பங்கள் மீதான கட்டளையில் நிபந்தனைகளை விதித்திருந்தார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.
பிணையில் விடுவிக்கப்பட்டதால் அவர்களுக்கு தென்னிலங்கையில் மீளவும் பணியில் இணைத்தது சிறீலங்கா காவல்துறை பல்வேறு பகுதிகளிலிருந்து கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சென்று கையொப்பமிடுவது சிரமமாகவுள்ளதாகவும் அந்த நிபந்தனையில் தளர்வு செய்யுமாறும் சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றில் பிணை விண்ணப்பம் மீதான சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here