வடக்கில் பொலீஸ் உத்தியோகத்தர்கள் திடீர் மாற்றம்!

0
340

poliseயாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் உத்தி யோகத்தர்கள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேக்கர தெரிவித்தார்.

இதன்படி வழங்கப்பட்ட இடமாற்றங்களின் படி யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் வீரசேகர, சீதாவாக்கபுர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக இடமாற்றப்பட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டப்ளியூ. கே. ஜயலத் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் அத்தியட்சகர் ஜி. ஜே. ஏ. விஜயசேகர யாழ். மாவட்டத்தில் இருந்து கிளிநொச்சிக்கும் உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி. எஸ். டி. வீரசிங்க கிளிநொச்சியில் இருந்து யாழ். மாவட்டத்திற்கும் இடமாற்றப்பட்டுள்ளார்.

உதவி பொலிஸ் அத்தியட்சகர் யு. ஏ. பி. பெர்னாண்டோ மன்னாரில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்ட அதேவேளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் பி. ஏ. கே. ஏ. சேனாரத்ன யாழ். மாவட்டத்தில் இருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார். உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர். ஏ. டி. ஈ. எல். ரன்தெனிய முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here