செங்கலடியில் சுற்றுலா சென்ற இளைஞன் சடலமாக மீட்பு!

0
521

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச பிரிவிற்குட்பட்ட கித்துள் ஆற்றில் 17 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஏறாவூரைச்  சேர்ந்த மொகமட் அசான் எனும் இளைஞரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர் தனது குடும்பத்துடன் விடுமுறையை களிக்கச் சென்ற போதே இவ்வாறு ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என தெரியவருகிறது.
இச் சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதுடன், சடலம் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here