முல்லைத்தீவில் கோரவிபத்து கணவன் பலி;மனைவி படுகாயம்!

0
359

முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில், கணவன் உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டுவாகல் பாலத்திற்கு அண்மையில், இன்று(11.01.2020) சனிக்கிழமை காலை உந்துருளி மற்றும், கடற்படையினரின் வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த முல்லைத்தீவு – மல்லாவிப் பகுதியைச்சேர்ந்த, 32 வயதான கே.ஜீவன் என்ற குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன், அவரின் மனைவியான ஜீ.வினுஜா படுகாயமடைந்த நிலையில், முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் முல்லைத்தீவு காவல்துறையினர் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here