காணமலாக்கப்பட்ட உறவுகளின் இணைப்பாளர் ராஜ்குமார் மீது தாக்குதல்!

0
491

வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவரும் காணமலாக்கப்பட்ட உறவுகளின் வடக்கு கிழக்கு இணைப்பாளருமான கோ.ராஜ்குமார் மீது இன்று 30.12.2019 திங்கட்கிழமை வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் பகுதியில் வைத்து ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்கள் தாக்குதல்கள் நடதியதில் அவர் காயம் அடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று வவுனியா காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குற்றம் சுமத்துகின்றனர்.

அவர் மீது தாக்குதல் நடாத்தியிருந்தாலும் அந்த தாக்குதலாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் உண்மையில் ஈழமக்கள் ஜனநாயகக்கட்சிதான் தாக்குதல் நடாத்தியிருந்தால் அவர்கள் ஜனநாயகம் என்றசொல்லை அகற்றவேண்டும் ஜனநாயக வழியில்போராட்டம்.நடாத்தியவர்கள்மீது தாக்குதல் நடாத்துவது வன்மையான கண்டனத்துக்குரியது. எவர்கள் தாக்குதல் நடாத்தினார்களோ அவர்கள்மீது உரிய தரப்பினர்(பொலீசார்) நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுடன் இந்தத் தாக்குதலை யாழ்.மாவட்டமீனவர் ஒத்துழைப்பு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது

தலைவர்
இ.முரளீதரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here