யாழில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு: பறிபோன மேலும் ஓர் உயிர்!

0
491

டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடந்த 18ஆம் திகதி குறித்தநபருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ள நிலையில், 21ஆம் திகதி இரவு வீட்டில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதன்போது அவரது உறவினர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவரை அனுமதிருந்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.

உயிரிழந்தவர் நாவாந்துறை தெற்கு யாழ்ப்பாணம் பகுதியினைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 43 வயதுடைய நாகரத்தினம் ராஜேந்திரன் என்பவர் எனத் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here