உக்கிரமடைந்து பங்களாதேஷ் கடற்கரை நோக்கி நகரும் ‘புல் புல்’ சூறாவளி!

0
498

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘புல் புல்’ சூறாவளி உக்கிரமடைந்து பங்களாதேஷ் கடற்கரை நோக்கி நகர்வதன் காரணமாக வடமேல் கடல் பிரதேசம் கொந்தளிப்பாக காணப்படுமென வளிமண்டலத் திணைக்களம் அறிவித்துள்ளது.  

குறித்த கடற்பரப்புகளில் கடும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை, மிகவும் கொந்தளிப்பான கடல், மிகப் பலத்த காற்று போன்றவற்றிற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதன் காரணமாக எதிர்வரும் 11ஆம் திகதி வரை குறித்த பிரதேசங்களை சேர்ந்த மீனவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here