தமிழினப் படுகொலையாளிகளின் யாழ். வருகையை எதிர்த்து மக்கள் போராட்டம்!

0
556

தமிழினப் படுகொலையாளிகளான கோத்தபாய ராஜபக்ச , மகிந்தா உள்ளிட்டோரின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழினப் படுகொலையாளிகளான கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலரும் இன்று யாழ்ப்பாணத்திறகு பயணம் செய்கின்றனர்.

இந் நிலையில் யாழ் சங்கிலியன் பூங்கா முன்பாக ஒன்று திரண்ட காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோத்தபாயவிற்கு எதிர்ப்பைத் தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது கோத்தபாயவே வெளியேறு, காணாமலாக்கப்பட்ட உறவுகள் எங்கே, வெள்ளைவான் முதலாளி கோத்தாவே வெளியேறு, எமது மக்களை கடத்தாதே, ஐ. நா அமைதிப்படையே வா, சர்வதேச நீதிமன்றில் நிறுத்து, இனப்படுகொலையாளி மகிந்த, கோத்தாவை கைது செய், பக்கச்சார்பற்ற விசாரணையை நடாத்து உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here