
வெளிநாட்டு பணத்தினை பெற்றுக் கொண்டு தமது போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் ஒரு குழு செயற்படுவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகத்தில் இன்று (23) காலை ஊடக சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி கலாரஞ்சினி இவ்வாறு தெரிவித்தார்.
மேலும்,
சமது போராட்டத்தினை வலுவிழக்க செய்து சிதைக்கும் நோக்குடன் புதிதாக ஒரு தரப்பு வெளிநாட்டு பணத்தினை பெற்றுக் கொண்டு செயற்படுகின்றனர். குறித்த செயற்பாடு இதுவரை காலமும் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் செயற்பாடுகளிற்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை காலமும் எமது பிள்ளைகளுக்காக வீதிகளில் நின்று போராட்டத்தை முன்னெடுத்த பெற்றோர்கள் இன்றும் கண்ணீருடன் வாழ்கின்றனர். இவ்வாறான நிலையில் வெளிநாடுகளிலிருந்து வழங்கப்படும் பணத்திற்காக போராட்டத்தை சிதைக்கும் நோக்குடன் சிலர் செயற்படுவதாகவும், அவர்களை இனங்கண்டு நடவடிக்கை எடுக்க