பிரான்சில் திருக்குறள் திறன் இறுதிப் போட்டிகள் நாளை!

0
401

தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகத்தின் ஏற்பாட்டில் பிரான்சில் தமிழ்ச்சோலைப் பள்ளிமாணவர்களிடையே நடாத்தப்படும் திருக்குறள் திறன் போட்டிகளின் இறுதிப்போட்டிகள் பிரான்சு மட்டத்தில் நாளை (20.10.2019) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு போண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெறவுள்ளன.
திணைக்களமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன் போட்டிகள் கடந்த (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை பொண்டி தமிழ்ச்சோலை மண்டபத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக தமிழ்ச்சோலைப் பள்ளிகளிலே பள்ளிமட்டத்தில் நடாத்தப்பட்ட திருக்குறள் திறன்போட்டிகளில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே குறித்த திணைக்களமட்டப் போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
திணைக்களமட்டப் போட்டிகளில் தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களே எதிர்வரும் 20.10.2019 ஞாயிற்றுக்கிழமை பிரான்சு மட்டத்திலான திருக்குறள் திறன்போட்டிகளில் பங்குகொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here