சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 35 பேர் உடல் கருகிப் பலி!

0
499

சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் 35 வெளிநாட்டவர்கள் தீயில் கருகி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Al-Akhal கிராமத்திற்கு அருகே Madinah-வில் இருந்து 170 கி.மீ தூரத்தில் உள்ள Hijra சாலையில் இரவு 7 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது. 39 பயணிகளைக் கொண்ட தனியார் பேருந்து பாரவூர்தி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் காயமடைந்த நான்கு பேர் Al-Hamna மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்த 35 பேர் ஆசிய மற்றும் அரபு நாடுகளை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தை அடுத்து சவுதி ரெட் கிரசண்ட் ஆணையம் மற்றும் பிற அவசர சேவைகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீடபு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சவுதி இளவரசர் இரங்கல் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here