கிளி.பரந்தனில் வீடொன்றில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!

0
469

கிளிநொச்சி பரந்தனில் வீடொன்றில் இருந்து இளம் குடும்பஸ்தர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஒரு பிள்ளையின் தந்தையான 29 வயதுடைய நிதர்சன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இவர் குடும்பத்தில் ஏற்பட்ட க சப்பு காரணமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார்.

இவரை 5 நாட்களாக தேடி வந்த குடும்பத்தினர் வீடொன்றில் துர்நாற்றம் வீசுவதனை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து அயலவர்கள் கொடுத்த தகவலின்படி சடலத்தை பொலிஸார் மீட்டு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here