யாழ். மாநகர மேயரின் உத்தரவால் மறைக்கப்பட்ட தியாகி திலீபனின் “லெப்.கேணல்”!

0
486

தியாகதீபம் திலீபன் அண்ணாவின் 32வது நினைவேந்தலை முன்னிட்டு நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தலிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் ஏற்பாட்டுக்குழுவினரால் செய்யப்பட்டு பூர்த்தியடைந்த நிலையில் நேற்று இரவு திடீரென வந்த யாழ் மாநகர துணை மேயர் ஈசனால் அங்கு திலீபன் அண்ணாவின் பிரமாண்ட படம் ஒன்று வைக்கப்பட்டது.

அதில் தியாகதீபம் லெப். கேணல் திலீபன் என்றே பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. பின்னர் காலையில் திடிரென மீண்டும் அவ்விடத்திற்கு வந்த சிலர் மேயரின் உத்தரவு என்று சொல்லி லெப். கேணல் என்பதை கறுப்புத்துணியால் மறைத்துள்ளனர்.

இச்செயலானது அங்கு கூடியிருந்த மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here