பௌத்த பிக்குகளின் அடாவடியைக் கண்டித்து வவுனியாவில் அலையெனத் திரண்ட மக்கள்!

0
325

செம்மலை, நீராயடி ஆலயத்தில் பௌத்த பிக்குகள் நீதிமன்ற தீர்ப்பை மீறி மேற்கொண்ட அடாவடியைக் கண்டித்து வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (26.09.2019) கவனயீர்ப்பு போராட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘நீராவியடி எங்கள் பூமி, இலங்கையில் தேரர்களுக்கு ஒரு சட்டம். மக்களுக்கு ஒரு சட்டமா, காவி உடையில் காடையர்களா, இனங்களுக்கிடையில் முறுகலை தூண்டாதே, ஞானசார தேரரை கைது செய், பௌத்தம் போதிக்கும் தர்மத்தை சிதைக்காதே, நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காதே’ போன்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியிருந்தனர்.

அத்துடன் தேரர்களுக்கு எதிரான கோசங்களையும் எழும்பியிருந்ததுடன், பிக்குகளின் அடாவடியை வெளிப்படுத்திய பதாதைகளையும் தீயிட்டு எரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here