“திலீபன் அண்ணாவின் வழியில் வருகின்றோம்” பயணம் மிருசுவிலில் இருந்து நாவற்குழி வரை!

0
370

திலீபன் அண்ணாவின் வழியில் வருகின்றோம் என்ற தொனிப்பொருளில் வவுனியாவில் இருந்து நல்லூரில் உள்ள திலீபன் அண்ணா நினைவாலயத்தை நோக்கிய நடை பயணத்தில் 5ஆம் நாள் இன்று (25.09.2019) புதன்கிழமை பயண விபரம் வருமாறு:-

காலை – 7.30 மிருசுவில் சந்தியில் இருந்து நடைபயணம் ஆரம்பம்

குறித்த பிரதேசத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்கள் தியாகதீபம் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்க்கு மலர்மாலை அணிவித்தும் மலர்தூவி அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன…

கொடிகாமத்தில் காலை 09 மணி முதல் 10 மணிவரை,
சாவகச்சேரியில் 11 மணி முதல் 01 மணி வரைக்கும்
கைதடியில் மாலை 03 மணி முதல் 04 மணி
வரை அஞ்சலி செலுத்தமுடியும் என்பதனை அன்புடன் அறியத்தருகின்றோம்.
மாலை – 5.00 நாவற்குழி சந்தியுடன் நாளைய நடை பயணம் நிறைவு பெறும்.

அனைவரையும் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபன் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செய்வதற்கும் நடை பயணத்தில் பங்குபற்றவும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here