பிரான்சு பாரிசிலிருந்து புறப்பட்ட நீதிக்கான நடைபயணம் இன்று 4வது நாளாக 8.15 மணிக்கு அகவணககம் செலுத்தப்பட்டு 32 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சொன்ஸ் மாநகரம் நோக்கி புறப்பட்டுள்ளது.
31.08.2019 இன்றுடன் 119 கிலோ மீற்றர் தூரத்தை அடையவுள்ளது. நடந்து போகும் பாதைகள் சற்று வயல் வெளிகளையும்,காடுகளையும் கொண்டிருந்தாலும் கடும் வெயிலான காலநிலை நிலவுகின்றபோதும் நீதி கேட்கும் மனிதநேய நடைபயணம் எழுச்சிகரமாகவே சென்று கொண்டிருக்கின்றது.




















