யாழ்.சாவகச்சேரியில் நேற்று ஆணின் சடலம் மீட்பு!

0
524

யாழ்.சாவகச்சேரியில் நேற்று மாலை அமர்ந்த நிலையில்
தூக்கிட்டபடி இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சாவகச்சேரி -தனங்கிளப்பு வீதியில் கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு அருகிலேயே நேற்று (14) மாலை இச் சடலம் மீட்கப்பட்டது.

மேலாடைகள் அகற்றப்பட்ட நிலையில், உள்ளாடையுடன் சிறிய பூவசரம் மரமொன்றில் தூக்கிட்டு, அமர்ந்த நிலையில்
அவரது சடலம் காணப்பட்டது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒருவரின் சடலமே மீட்கப்பட்டது. அவர் அந்த பகுதியை சேர்ந்தவர் அல்லவென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

வேறிடத்தில் இருந்து வந்து அங்கு அவர் உயிரை மாய்த்தாரா அல்லது, கொலைசெய்யப்பட்டாரா என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here