தமிழர் பிரதேசங்களில் அத்துமீறும் விகாரைகள்: ஆட்சேபித்து நல்லை ஆதீன முன்றிலில் நாளை மெளனப் பேரணி!

0
225

தமிழர் பிரதேசங்களில் விகாரைகள்
அமைத்தல் உட்பட பெளத்த மேலாதிக்க செயற்பாடுகள் முன்னெடுக்கப் படுகின்றமையை ஆட்சேபித்தும் இந்து
ஆலயங்கள் பாதிப்புக்குள்ளாவதனால்
அச்சமடையும் இந்துக்களின் மன
உணர்வுகளை வெளிப்படுத்தும் நோக்
கிலும் அமைதி வழியிலான மெளன
பேரணி நாளை சனிக்கிழமை காலை
9மணி தொடக்கம் 10மணி வரை
நல்லை ஆதீன முன்றிலில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பேரணி எந்தவொரு அரசியல் கட்சியும் சார்ந்தது அல்ல என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இது
இந்து அமைப்புகளின் ஒன்றியம் மற்றும் இந்து சமயப்பேரவை ஆகியவை இணைந்து முன்னெடுக்கும் நிகழ்வாகும்.
இந்து அமைப்புகளின் ஒன்றியத்தின் உப தலைவர் என்ற வகையில் சகல சைவ பெருமக்கள் அனைவரையும் இந்தப் பேரணியில் கலந்து கொள்ளுமாறு வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் கேட்டுக்கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here