மதவாச்சி அநுராதபுரம் பிரதான வீதி விபத்தில் மூவர் பலி!

0
219

மதவாச்சி அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

ஐவர் படுகாயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் சொகுசுப் பேருந்து, எதிர்த்திசையில் பயணித்த பாரவூர்தியுடன் நேருக்கு நேர் மோதி விபத்து நடந்துள்ளது.
விபத்தில் 8 பேர் காயமடைந்த நிலையில், மதவாச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூவர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர்கள் யாழ்ப்பாணம் – நல்லூர், கல்வியங்காட்டை சேர்ந்த (தாயும் மகளும்) சதாசிவம்(சிறி) சுகி இவரது பேரப்பிள்ளை (Germany) மற்றும் மகள் அஜந்தன் கோபிகா (ஆசிரியை, கரியாலைநாகபடுவான் மகா வித்தியாலயம்) ஆகியோர் இன்று வாகன விபத்தில் அகாலமரணமடைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here