பிரான்சில் இன்று இடம்பெறும் தமிழ்மொழி பொது எழுத்துத் தேர்வு!

0
318

தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் வருடாந்தம் நடாத்தும் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு இன்று 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது..

இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 6 ஆயிரத்து 85 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.

பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் இன்று இடம்பெறுவதால் அனைவரையும் முன்கூட்டியே தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here