
வவுனியா ஓமந்தை பகுதியில் நேற்று (30) மதியம் 3.00 மணியளவில் மகிழுந்து ஒன்று மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். மரணமடைந்தவர் முன்னாள் பாடசாலை அதிபரான வையாபுரிநாதனின் மனைவியான 82 வயதான திலகவதி என்பவரே மரணமடைந்துள்ளார்.
இதேவேளை காயமடைந்த மூவரில் ஒருவர் அனுராதபுரத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.