பிரான்சில் செவ்ரோன் மற்றும் கிளிச்சிப் பகுதியில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

0
657

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் மாபெரும் இனப் படுகொலையின் ஆரம்ப நிகழ்வுகள் செவ்ரொன் மற்றும் கிளிச்சிப் பகுதிகளில்  18.05.2019 சனிக்கிழமை
இடம்பெற்றன.
காலை 9 மணிக்கு செவ்ரோன் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுக் கல் அமைந்துள்ள பகுதியில் நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

தொடர்ந்து காலை 11.00 மணியளவில் கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவுத் தூபியின் முன்பாக நினைவு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வுகளில் குறித்த பகுதிகளைச் சேர்ந்த மாநகரசபை உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தினர்.   
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here