யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

0
219

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துநர் ஆகியமூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகமுன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெற்றது.

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும்இடையிலான வழக்கு நாளை வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்டமா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here