தரம் ஒன்று முதல் ஐந்து வரை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்!

0
311

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் தரம் ஆறு முதல் 13 வரையான மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் கடந்த ஆறாம் திகதி ஆரம்பமானது.

எனினும் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது.

தற்போது பாடசாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகளை இன்று ஆரம்பிப்பதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் புலனாய்வு பிரிவினாலோ பாதுகாப்பு தரப்பினாலே உறுதிப்படுத்தபடவில்லை எனவும் நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமையினால் எவரும் அச்சமடைய வேண்டியதில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here