மன்னார் மனிதப் புதைகுழி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!

0
216

மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

இதன்போது, வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மன்னார் மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை அடுத்த மாதம் 31 ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அகழ்வுப்பணிகள் தொடர்பில் ஆலோசனை வழங்கும் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவா தெரிவித்தார்.

அது தொடர்பிலான அனைத்து சோதனைகளும் நிறைவடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அகழ்வின் போது மீட்கப்பட்ட மனித எலும்புகள் தவிர்ந்த ஏனைய பொருட்களை நீதிமன்ற அனுமதியின் பேரில் மீண்டும் ​சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டுள்ள மனித எலும்புகள் 350 முதல் 600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்திற்குரியவை என அமெரிக்காவின் பீட்டா அனலைசிஸ் நிறுவனத்தினால் நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதத்தில் மன்னார் சதொச கட்டட நிர்மாண நடவடிக்கைகளுக்காக நிலத்தை தோண்டிய சந்தர்ப்பத்தில் மனித எலும்புக்கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here