பிரான்சில் புலன்மொழித்தேர்வு 3 ஆவதுநாளாக நாளை இடம்பெறுகின்றது!

0
1053


 தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் நடாத்தும் புலன்மொழி வளத்தேர்வு கடந்த 04.05.2019 சனிக்கிழமை சிறப்பாக ஆரம்பமாகி மறுநாள் 05.05.2019 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற்று முடிந்த நிலையில் நாளை 12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 3 ஆவது நாளாக இடம்பெறுகின்றது.

இம்முறை பிரான்சில் Île De France மற்றும் பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் (ஸ்ரார்ஸ்பேர்க்,நீஸ்,போர்சோலை,முலுஸ்,துளுஸ்,றென்,தூர்,ஜியான்,போ,போர்தோ1, போர்தோ2, நெவர்) மொத்தம் 6 ஆயிரத்து 85 மாணவர்கள் தேர்வுக்குத் தோற்றுவுள்ளதுடன் 350 இற்கு மேற்பட்ட ஆசிரியர்களும் கடமையாற்றுகின்றனர்.

 04.05.2019 சனிக்கிழமை 21 தேர்வு நிலையங்களிலும் 05.05.2019 ஞாயிற்றுக்கிழமை 10 தேர்வு நிலையங்களிலும்  12.05.2019 ஞாயிற்றுக்கிழமை 17 தேர்வு நிலையங்களிலும் புலன்மொழி வளத்தேர்வு கேட்டல், பேசுதல், வாசித்தல் என்ற பிரிவுகளில் நடைபெறுவதுடன் தமிழ்மொழி எழுத்துத் தேர்வு வரும் 01.06.2019 சனிக்கிழமை வழமைபோன்று LA MAISON DE EXAMENS 7,RUE RUE ERNEST RENAN 94114 ARCEIL (RER – B LA PLACE) என்ற முகவரியில் இடம்பெறவுள்ள அதேவேளை பிரான்சின் வெளிமாவட்டங்களிலும் இடம்பெறவுள்ளது எனத் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தெரிவித்துள்ளது.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here