யாழ்.புன்னாலைக்கட்டுவனில் விபத்து: பெண் பலி!

0
235

பலாலி- யாழ். பிரதான வீதியின் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை பிள்ளையார் ஆலயத்தின் அருகே இடம்பெற்ற விபத்தில் குடும்பபெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். 

மேலுமொருவர்  பலத்த காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்துப்  பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் யாழ்.குப்பிளான் தெற்கு பகுதியைச் சோ்ந்த கே. சுசிலா (வயது 48)என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, 

பலாலி பகுதியிலிருந்து யாழ். நகர் நோக்கி சென்று கொண்டிருந்த ஹயஸ் வேன், அதே திசையில் பயணித்த துவிச்சக்கரவண்டியை மோதியதினாலேயே  இந்த விபத்து இடம்பெற்றது. 

வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன் விபத்தினை ஏற்படுத்திய சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணையை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here