முல்லைத்தீவில் மின்னல் தாக்கி சிறுவன் பலி!

0
253

முல்லைத்தீவு – விசுவமடு, புத்தடி பகுதியில் மின்னல் தாக்கத்திற்கு இலக்கான 17 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குளிக்கச் சென்றிருந்த போது, மரத்தடியில் நின்றுகொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியுள்ளது.

மின்னல் தாக்கத்திற்கு இலக்கான அவரது சகோதரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசுவமடு – புத்தடி பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் இவர்கள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகியுள்ளனர்.

தர்மபாலசிங்கம் தயானந்தா (வயது17) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here