149 பயணிகளுடன் புறப்பட்ட எத்தியோப்பிய விமானம் விபத்து!

0
658

149பயணிகள், 8விமான சேவை பணியாளர்களுடன், எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து கென்யாவின் நைரோபி சென்ற விமானம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

எத்தியோப்பியன் எர்லைன்ஸ் போயிங் 737 ஜெட் விமானம் இன்று எத்தியோப்பிய நகரிலிருந்து உள்ளுர் நேரப்படி காலை 08.38க்கு புறப்பட்ட சிரிது நேரத்தில் 08.44 அளவில் விபத்துக்குள்ளானதாக எத்தியோப்பிய விமான சேவை பணியகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த விபத்து குறித்து எத்தியோப்பிய பிரதமர் அபே அஹமட் பாதிக்கப்பட்ட பிரயாணிகளின் குடுமப்த்துக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தனது டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here