பொலிஸாரின் தீவிர கண்காணிப்புக்கு மத்தியில் யாழில் தொடரும் பெற்றோல் குண்டு தாக்குதல்கள்!

0
353

யாழ். சுன்னாகம் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது நேற்றைய தினம் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த உந்துருளி ஒன்றும் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. 

நேற்று(புதன்கிழமை) இரவு யாழ்.சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் உந்துருளிகளில் சென்ற கும்பல் ஒன்று வீட்டின் மீது பெற்றோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதுடன் , வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உந்துருளி ஒன்றையும் தீயிட்டு கொளுத்திவிட்டுத் தப்பி சென்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு வீட்டு உரிமையாளர் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

அதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமை கொக்குவில் பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஹயஸ் ரக வாகனங்கள் மற்றும் இரண்டு உந்துருளி என்பன தீயிட்டு எரிக்கப்பட்டன. குறித்த சம்பவம் தொடர்பில் நேற்று புதன்கிழமை நால்வர் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் அண்மைக்காலமாக வீடுகளின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதனால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச நிலைமை ஏற்பட்டுள்ளது. 

அதேவேளை , கொக்குவில் சம்பவத்தின் பின்னர் பொலிஸ் விசேட குழுக்கள் தீவிர விசாரணைகளிலும் வீதி சோதனை நடவடிக்கைகைகளிலும் ஈடுபட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here