டெல்லி தனியார் விடுதியில் தீவிபத்து: குழந்தை உட்பட 17 பேர் பலி!

0
213

டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது.

தலைநகர் டெல்லியின் கரோல் பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்ற தனியார் நட்சத்திர விடுதி உள்ளது. இந்த விடுதியில் இன்று அதிகாலை 4 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.  தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சுமார் 26 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேர போராட்டத்துக்கு பின் காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. 

இதில் குழந்தை உட்பட 17 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தீவிபத்து ஏற்பட்டதை அறிந்து ஜன்னல் வழியாக கீழே குதித்த பெண் மற்றும் அவரது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் சிக்கியிருந்த 34 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு அருகில் உள்ள ராம் மனோகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நிகழ்ந்தபோது பெரும்பாலானோர் தூங்கிக் கொண்டிருந்ததாகவும், பலியான 17 பேரில் ஏராளமானோர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்ததாகவும் பொலிசார் கூறினர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here