வவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு!

0
194

வவுனியா ஈரப்பெரியகுளத்தில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொங்கல் தினமான நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தைப்பொங்கள் தினத்தை முன்னிட்டு தமது பொழுதைக்கழிக்க ஐந்து நண்பர்களாக இணைந்து ஈரப்பெரியகுளத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த ஐவரும் அங்கு உணவருந்திய பின்னர் கை கழுவுவதற்காக ஒருவர் குளத்தின் நீர்ப்பகுதிக்கு சென்றபோது தவறுதலாக கீழே வீழ்ததாகவும் அவரை காப்பாற்றும் நோக்கோடு சென்ற மற்றைய நண்பனும் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வவுனியா விபுலானந்தா கல்லூரியில் பயிலும் சாதாரணதர மாணவர்களான 16 வயதுடைய திபின்சன் மற்றும் கரிகரன் ஆகிய மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இரட்டபெரியகுளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here