வடமராட்சி கிழக்கு கடற்பரப்பினில் நேற்றிரவு இலங்கைக்கடற் பரப்பிற்குள் நுழைந்த இந்திய மீனவர்களின் 05 படகுகளும் 33 மீனவர்களும் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் புகும் இந்திய மீனவர்களை கைது செய்யவும் ஒருவருடத்திற்கு குறையாத சிறைத்தண்டனையெனவும் சிறிலங்கா ஜனாதிபதி புதிய உத்தரவை பிறப்பித்துள்ள நிலையினில் இந்திய மீனவர்கள் கைதாகியுள்ளனர்.