வகுப்புக்களுக்கு தவறாது சென்றதனால் முதலிடம் பெற்றேன்!

0
134

வகுப்புக்களுக்கு ஒழுங்கான முறையில் சென்று படித்ததனால் தான் கணிதத் துறையில் முதலிடத்தைப் பெற முடிந்தது என வவுனியா மாவட்டத்தில் கணிதத்துறையில் முதலிடம் பெற்ற இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெககுமாரன் பூஜிதா தெரிவித்துள்ளார். வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் 3 ஏ சித்திகளைப் பெற்று, மாவட்டத்தில் முதலிடத்தையும், தேசிய ரீதியில் 14 ஆவது இடத்தையும் பெற்றமை குறித்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவி ஜெ.பூஜிதா கருத்துத் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நான் மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமை மகிழ்ச்சியாகவுள்ளது. நான் இந்த நிலையை அடைவதற்கு காரணமான எனது பெற்றோர், என்னை வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்களுக்கு நன்றிகள். நான் வகுப்புக்களுக்கு ஒழுங்காகச் சென்று ஆசிரியர்கள் தரும் விடயங்களை அவதானித்து ஒழுங்காக படித்தமையினாலேயே இந்த நிலையை அடைய முடிந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here