அச்சுவேலியில் தீ விபத்து ; புத்தகக்கடை தீக்கிரை!

0
470

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் புத்தகக்கடையொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த சம்பவம் அச்சுவேலி நகரிலுள்ள புத்தகக் கடையொன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

புத்தகக்கடையின் உரிமையாளர் இன்று காலை பணிக்கு வந்துள்ளார். இதன்போது புத்தகக்கடை எரிந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

எனினும் அங்கிருந்த பொருட்களும் அந்தக் கடையும் முற்றுமுழுதாக தீக்கிரையாகியுள்ளது.

இந்த தீ விபத்து காரணமாக பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள்  நாசமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தீ ஏற்பட்டதற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here