யாழில் மது போதையில் கார் ஓட்டிய அதிகாரிமோதிஇளைஞன் பலி!

0
706

வீதியில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை வேகமாக வந்த மோட்டார் கார் மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (25) இரவு 10.45 மணியளவில் கோப்பாய் கைதடி செல்லும் வீதியில் இடம்பெற்றுள்ளது.

அளவெட்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோப்பாய்வெளி ஊடாக கைதடி நோக்கி சென்ற 30 வயதுடைய இளைஞனை அவ்வழியே வேகமாக சென்ற மோட்டார் கார் மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்று மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் சென்றவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மோதிய மோட்டார் கார் அருகே உள்ள நீரேரிக்குள் பாய்ந்துள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் கொடிகாமம் கச்சாய் பகுதியை சேர்ந்த கந்தசாமி கருணாகரன் (வயது-30) என்பவராவார்.

இவ்விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்ட கோப்பாய் பொலிஸார் மோட்டார் காரினை செலுத்தி சென்ற நபரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் நிறைமது போதையில் காணப்பட்டதாகவும் திருகோணமலையில் உள்ள பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here