வட்டக்கச்சி – கிளிநொச்சி வீதி உடைப்பு:மக்கள் சிரமம்!

0
321

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டமையினால் வட்டக்கச்சி — கிளிநொச்சி வீதியின் பன்னங்கண்டி பகுதியின் வீதிகள் முழுமையாக அரிக்கப்பட்டு பாரிய குழிகள் ஏற்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தினால் சில பிரதான பாதைகள் சேதமடைந்துள்ளதால், போக்குவரத்தை மேற்கொள்ள பொது மக்கள் சிரமத்தை எதிர்கொள்கின்றனர்.

வெள்ளப் பெருக்கினாலும், இரணைமடுக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டதால் வெளியேறிய நீராலும் அக்கராயன், பிரமந்தனாறு, கலமடுக்குளம், கரியாலை,நாகபடுவான் போன்ற குளங்கள் வான் பாய்ந்தமையினால் வெளியேறிய நீராலும் பிரதான வீதிகள் பெருமளவு சேதமடைந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here