பிரான்ஸ் தமிழீழ மக்களின் வெள்ளை தாய் மடம் பவுல் லுயிய் வியோலெத் Mme. Paula Lugi Violette சாவடைந்துள்ளார்!

0
142

vallai ammaஈழத்தமிழ் மக்களுக்காகவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட படுகொலைக் கெதிராகவும் தனது தள்ளாத வயதிலும் குரல் கொடுத்த பிரான்சு ஈழத்தமிழ் மக்களால் வெள்ளை தமிழிச்சி என்று அழைக்கப்பட்ட மடம் பவுல் சாவடைந்துள்ளார்.

நீண்ட காலமாய் தமிழர்களின் உரிமைப்போராட்டங்களுக்கு கால நேரம் பார்க்காமல் முதல் ஆளாய் நிற்பவர். பிரான்ஸ் தொட்டு ஜெனீவா முன்றல் வரை கால் பதியாத இடமே இல்லை. அத்தனை எம் போராட்டங்களிலும் கலந்து கொண்டு எமது விடுதலை பயணத்தில் தன்னை இணைத்துகொண்டவர் மடம் பவுல் லுயிய் வியோலெத் .இவரது நல்லடக்கம் தொடர்பான தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

மேலதிக தொடர்புகளுக்கு : தமிழர் ஒருங்கிணைப்புக்குழு- பிரான்சு 01 43150421

குறிப்பு – அவரின் இறுதி நிகழ்வில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களை கலந்துகொள்ளுமாறு வேண்டுகின்றோம் .
நன்றி
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here