பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் இரத்த தான நிகழ்வு!

0
423

மாவீரர் வாரத்தை முன்னிட்டு பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் இரத்த தான நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளார்கள்.

மனிதாபிமானம், ஈகம் நிறைந்த விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை எடுத்துரைக்கும் புலம்பெயர் தமிழர்கள்

மாவீரர் வாரத்தை (21.11.2018 – 27.11.2018) முன்னிட்டு தமிழ்த் தேசிய விடுதலை என்ற உயரிய இலட்சியத்திற்காக களமாடி தம்முயிரை ஈகம் செய்த மாவீரர்களது உன்னத தியாகங்களையும், அவர்களின் அர்ப்பணிப்பையும் பறைசாற்றும் விதமாகவும் பெல்ஜியத்தில் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் மனிதநேய செயற்பாடுகளும், வணக்க நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதேபோல் 21.11.2018 அன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இரத்த தான நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பிறரது வாழ்வுக்காக தமது உயிரை தியாகம் செய்வது மனிதச் செயலன்றி தெய்வச் செயலாகும். இரத்தத்தை தியாகம் செய்து மனிதத் தன்மையே உயர்ந்தது எனக் காட்டியது எமது போராட்டம் . அந்த போராட்டத்தின் புனிதத்தை எடுத்துரைக்கும் முகமாகவே இரத்த தான நிகழ்வு அமைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here