தமிழீழத் தேசிய மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது!

0
1435

தமி­ழீழ இலட்­சி­யத்­துக்­காகத் தமது இறுதி மூச்­சு­வரை போராடி, கள­மாடி வீரச்சாவ­டைந்த வீர­ம­ற­வர்களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வார நினை­வேந்­தல் நிகழ்­வு­கள், தமி­ழர் தாய­க­மான வடக்கு ­கி­ழக்கு மண்­ணிலும் புலம்பெயர் தேசமெங்கினும் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் இன்று ஆரம்­ப­மா­கின்­றன.

கடந்த 2018 ஆம் ஆண்டு  தாயக தேசத்­தில் கொட்டும் மழைக்கு மத்தியில் பெரும்­பா­லான மாவீ­ரர் துயி­லும் இல்­லங்க­ளில் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல்­கள் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. தற்­போது நாட்­டில் எழுந்­துள்ள அர­சி­யல் நெருக்­கடி – குழப்­பங்­க­ளிற்கு மத்­தி­யி­லும், கொரோனா கொல்லுயிரியின் கோரத்திற்கு மத்தியிலும் மான மறவர்களை நினைவிற்கொள்ளும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­த­லைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு, தமி­ழர் தேசம்  தயா­ரா­கி­வருகின்ற நிலையில் தமிழர் தாயகத்தில் இனவாத சிறிலங்கா அரசு நீதிமன்றத் தடை உத்தரவுகளைப் போட்டுத் தடுத்து நிற்கிறது.

2009ஆம் ஆண்டு போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்ட பின்­னர், மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் சிறிலங்கா இனவாத இரா­ணு­வத்­தி­ன­ரால் இடித்­த­ழிக்­கப்­பட்­டன. மாவீ­ரர் வாரத்தை நினை­வு­கூர முடி­யா­த­ அள­வுக்கு நெருக்­க­டி­க­ளும் – கெடு­பி­டி­க­ளும் தமிழ் மக்­கள் மீது பிர­யோ­கிக்­கப்­பட்­டன.

2016ஆம் ஆண்டு, பகி­ரங்­க­மாக மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் நடத்­தப்­பட்­டன. தமி­ழீழ தேசத்­தில் முக்­கி­ய­மான மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளில், மாவீ­ரர் பெற்­றோர்­க­ளின் கண்­ணீர்க் கத­ற­லு­டன் நினை­வேந்­தல் கடைப்­பி­டிக்­கப்­பட்­டன. கடந்த 2019 ஆம் ஆண்­டும் மாவீ­ரர் நாள் நினை­வேந்­தல் தாயக தேசத்­தில் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­பட்­டது.

இந்த ஆண்­டும் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­கள் மாவீ­ரர் வாரத்­தைக் கடைப்­பி­டிப்­ப­தற்கு தயா­ரா­கி­விட்­டன. கடந்த ஆண்டும் துப்­பு­ர­வுப் பணி­கள் மக்­க­ளால் மும்­மு­ராக முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தவேளை சிறிலங்கா படையினர் இவற்றைத் தடுத்து நிறுத்த கங்கணம் கட்டி நின்றனர்.

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்பு, தமி­ழீழ விடு­த­லைக்­கா­கப் போராடி மடிந்த வீர­ம­ற­வர்­களை நினை­வு­கூ­ரும் மாவீ­ரர் வாரத்தை 1989ஆம் ஆண்­டி­லி­ருந்து கடைப்­பி­டித்து வரு­கின்­றது. ஒவ்­வொரு ஆண்­டும் நவம்­பர் மாதம் 21ஆம் திக­தி­யி­லி­ருந்து 27ஆம் திகதி வரை மாவீ­ரர் வாரம் கடைப்­பி­டிக்­கப்­ப­டும்.

நவம்­பர் 26ஆம் திகதி தமி­ழீழ தேசியத் தலை­வர் மேதகு வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ன் அவர்களின் பிறந்த நாள் கொண்­டா­டப்­ப­டும். மறு­நாள் நவம்­பர் 27ஆம் திகதி, மாவீ­ரர் நாள் உணர்­வெ­ழுச்­சி­யு­டன் கடைப்­பி­டிக்­கப்­ப­டும்.

அன்­றைய தினம் தமிழீழ தேசி­யத் தலை­வர் வேலுப்­பிள்ளை பிர­பா­க­ர­ன் அவர்களின் மாவீ­ரர் தின உரை முடி­வ­டை­யும் தரு­ணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்­பட்டு, மாவீ­ரர்­க­ளுக்­கான நினை­வுப்­பா­ட­லு­டன், ஈகச்­சு­ட­ரேற்­றல் நடை­பெ­றும்.

இந்த மாவீரர் வாரத்தில் நாம் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து மான மறவர்களை நினைவேந்தி நிற்போம் என ஒவ்வொருவரும் மாவீரர்கள் மீது உறுதி எடுத்துக்கொள்வோம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here