யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலை மாணவர் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0
205

பலாங்கொடை யில் குளிக்கச்சென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வரட்ணம் திசான் (வயது-25), சரவணபவன் கோபிசன் (வயது-23) மற்றும் கோபாலகிருஸ்ணன் சாரங்கன் (வயது-25) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர்.

பெலிஹுல் ஓயாவில் பஹன்குடா குழி என்ற பகுதியில் மூழ்கி மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

நீரில் மூழ்கிய மாணவர்களை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் இன்று முற்பகல் 10.30 அளவில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த மாணவர்கள் மூன்று பேரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவர்கள் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மூன்றாம் வருடத்தில் கல்வி பயின்ற மாணவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here