இங்கிலாந்தில் இலங்கைத் தமிழர் கொலை தொடர்பில் நால்வர் கைது!

0
102

london-merder copyஇங்­கி­லாந்தில் கொவென்ரி பகு­தியில் கொல் ­லப்­பட்ட இலங்கை தமிழர் கொலை தொடர் பில் கைது­செய்­யப்­பட்ட நான்கு சந்­தேக நபர்­களுள் ஒருவர் நேற்றுமுன்தினம் பர்­மிங்காம் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டுள்ளார்.

கடந்த மார்ச் 5 ஆம் திகதி, இங்­கி­லாந்தின் மேற்கு மிட்லேண்ட் பகு­தியில் 48 வயதான இலங்கை தமிழர், அரு­ணாச்­சலம் அரு­ணோ­தயம் என்­பவர் வீட்­டினுள், பலத்த காயங்­க­ளுடன் மீட்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திப்­பட்டார்.

5 ஆம் திகதி, மாலையே அரு­ணாச்­சலம் சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார். இந்­நி­லையில், இந்த சம்­பவம் குறித்து வழக்கு பதிவு செய்து இங்­கி­லாந்து பொலிஸார் விசா­ரணை செய்து வந்­தனர். பிரேதப் பரி­சோ­த­னையில், இவர் அடித்தே கொல்­லப்­பட்­டுள்ளார் என்­பதும் தெரி­ய­வந்­தது.

பொலி­ஸாரின் முதற்­கட்ட விசா­ர­ணை யில், சந்­தே­கத்தின் பேரில் பெட்வேர்த் பகு ­தியில் அமைந்­துள்ள விடு­தியில் பணி­யாற் றும் கிரிதாஸ் ஸ்ரீஸ்­கந்­த­ராஜா என்­ப­வரை கைது செய்­தனர். இதை அடுத்து இந்த வழக் கில், தமிழ் பெண் உட்­பட மேலும் மூன்று பேர் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். 20 வயதான தமிழ் பெண் விசாரணையின் பின் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here