பொங்குதமிழ் பேரணிக்கு வலுச்சேர்க்கும் பரப்புரை!

0
439

நேற்று 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை பாரிசு மாணிக்க விநாயகர் தேர்த்திருவிழாவின் போது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு ஜெனீவாவில் எதிர்வரும் 17.09.2018 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்கும் மாபெரும் பொங்கு தமிழ் பேரணிக்கு வலுச்சேர்க்கும் வகையில் துண்டுபிரசுரங்கள் வழங்கி பரப்புரை செய்திருந்தனர்.


பல மக்கள் ஆர்வத்துடன் வந்து அவற்றைப் பெற்றுச்சென்றதையும், தமிழீழ தேசியக்கொடிகள், மற்றும் தேச விடுதலைச்சின்னங்களைப் பெற்றுச்சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. இசைப்பிரியன் தலைமையில் தேசப்பாடல்களும், பக்திபாடல்களும் நேரடியாகவும், பொங்குதமிழ் எழுச்சிக்காக பிரான்சில் வெளியடப்பட்ட பாடல் இசைக்க விடப்பட்டுருந்தது அதற்கு மக்கள் பலத்த கரகோசத்தை வழங்கியிருந்தனர். பொங்குதமிழுக்கு வைக்கப்பட்ட உண்டியலில் மக்கள் தாங்களாகவே வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்.
எதிர் வரும் 3ம் திகதி பாரிசிலிருந்து ஈருருளி பயணப்போராட்டமும் நடைபெறவுள்ளதையும் அதில் இணைந்து பயணப்பட ஒருவர் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here