
தமிழர் தாயகத்தை துண்டாடவும் இனப் பரம்பலை மாற்றியமைத்து, தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (28) முல்லைத்தீவில் மாபெரும் கண்டனப் பேரணிக்கு மகாவலி எதிர்ப்பு தமிழர் மரவுரிமைப் பேரவை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் போராட்டத்திற்கு பல பொது அமைப்புக்கள் தமது ஆதரவை வழங்கியுள்ளன.


