சிறீலங்கா அரச படைகளால் 04.08.2006 அன்று மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பட்டினிக்கு எதிரான அமைப்பின் மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் 17 பேரின் நினைவு வணக்க நிகழ்வு கிளிச்சிப் பகுதியில் அமைந்துள்ள நினைவிடத்தில் எதிர்வரும் 04.08.2018 சனிக்கிழமை காலை 11.00 மணிக்கு இடம் பெற உள்ளது.