நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய சப்பரத்திருவிழா!

0
196

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த சப்பரத்திருவிழா நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மிகவும் பக்திபூர்வமாக நடைபெற்றது.

ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.  இம்முறையும் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் நயினை அம்மனைத் தரிசிக்கத் திரண்டிருந்தனர்.

தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் இன்று  27 ஆம் திகதி புதன்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் வியாழக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் மறுநாள் வெள்ளிக்கிழமை தெப்பத்திருவிழாவும் நடைபெறவுள்ளன.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here