சிறுத்தையை கொன்றவர்களை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

0
849

சிறுத்தையை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி அம்பால்குளத்தில் சிறுத்தையொன்றை அடித்துக்கொலை செய்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய சம்பவம் நேற்று இடம்பெற்றது.

இந் நிலையில் சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மிருக ஆர்வலர்கள் பலரும் பல கருத்துக்களை முன்வைத்து வந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை குறித்த காணொளிகளை ஆராய்ந்து கைதுசெய்யுமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://youtu.be/9UALfyxA9ro

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here